3. உறுப்புரிமை:-
அ) தகுதி
1. கல்லூரியின் சகல பழைய மாணவர்களும்
சகல ஆசிரியர்களும் (முன்னாள், இந்நாள்) சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களாகச்
சேர்ந்துகொள்ளத் தகுதியுடையோராவர்.
2. உறுப்புரிமைக்குத் தகுதியுடைய எந்தஉறுப்பினரும்
உறுப்புரிமை விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தி உருப்பினராவர்.
3. சேரும் உறுப்பினர் ஆட்சிக்குழுவின்
அங்கீகாரம் பெற்று ஆறு மாதங்களின் பின்னர் சங்கக்கூட்டங்களில் வாக்களிக்கும் உரிமை
பெற்றவராவார்.
ஆ) உறுப்புரிமை மூன்று வகைப்படும். அதாவது
1. சாதாரணம்
2. ஆயுள்காலம்
3. கௌரவம்
இ) சாதாரண உறுப்புரிமை:
1. பிரிவு3 (அ) இல் கூறப்பட்ட தகுதியைக் கொண்டிருக்கும்
அணைவரும் வருடாந்தம் உறுப்புரிமைக் கட்டணத்தை செலுத்தும் போது அவர் சாதரணஉறுப்பினராக
கருதப்படுவார்.
ஈ) ஆயுள்கால உறுப்புரிமை
1. 3 (அ) இல் கூறப்பட்ட தகுதியைக் கொண்டிருக்கும்
அணைவரும் வருடாந்தம்உறுப்புரிமைக் கட்டணத்தின் 5 வருட உறுப்புரிமைக் கட்டணத்தை செலுத்தும் போது அவர் ஆயுள்கால
உறுப்பினராக கருதப்படுவார்.
உ) கௌரவ உறுப்புரிமை:-
ஒருவர்கல்லலூரிக்கு அல்லது சங்கத்திற்கு
பெறுமதியான சேவையாற்றியிருப்பின் ஆட்சிக்குழுவின் விதப்புரையின் பேரில் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில்
கௌரவ உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார். கௌரவ உறுப்பினருக்குவாக்குரிமை
இருக்காது.